sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.076
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாடிய வெண்தலை மாலை சூடி, காந்தாரம் (திருஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=eQLOfeO_N6k |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.076  
வாடிய வெண்தலை மாலை சூடி,
பண் - காந்தாரம் (திருத்தலம் திருஅகத்தியான்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு அகத்தீசுவரர் திருவடிகள் போற்றி )
வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே. | [1] |
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான், மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர் அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே. | [2] |
உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்; கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால் அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே. | [3] |
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்; பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை, ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே. | [4] |
போர்த்ததுவும் கரியின்(ன்) உரி; புலித்தோல், உடை; கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் பார்த்ததுவும்(ம்) அரணம், படர் எரி மூழ்கவே. | [5] |
தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம், சென்று உடன் எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர் உறைவான் தலை, அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே. | [6] |
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச் சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும் ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே. | [7] |
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம், ஒறுத்ததுவும்; ஒளி மா மலர் உறைவான் சிரம், அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே. | [8] |
சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும், அரவும், மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே. | [9] |
செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே திரி புந்தி இலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி; அந்தணன், எங்கள் பிரான், அகத்தியான் பள்ளியைச் சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே. | [10] |
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில் ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள் சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே. | [11] |