sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்
இந்தளம்   (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CekV2gQOEpA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.003   பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருத்தெளிச்சேரி ; (திருத்தலம் அருள்தரு சத்தியம்மாளம்மை உடனுறை அருள்மிகு பார்வதீசுவரர் திருவடிகள் போற்றி )
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

[1]
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே,
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்!
வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?

[2]
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!
கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?

[3]
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?

[4]
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து
வௌவவே,
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?

[5]
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ, நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்!
குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே?

[6]
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்!
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?

[7]
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர்
சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்!
வித்தகப் படை வல்ல அரக்கன் விறல் தலை,
பத்து, இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?

[8]
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?

[9]
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?

[10]
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.

[11]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php