சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.072
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விங்கு விளை கழனி, மிகு பண் - சாதாரி (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.072  
விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி (திருத்தலம் திருமாகறல் ; (திருத்தலம் அருள்தரு புவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு அடைக்கலங்காத்தநாதர் திருவடிகள் போற்றி )
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம், மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்- கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்; செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே. | [1] |
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர் மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்- இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள் அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே. | [2] |
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர் மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்- தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப் பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே. | [3] |
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே, மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்- கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே! | [4] |
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய், மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்- வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும் நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே | [5] |
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய் இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்- மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே. | [6] |
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர் மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர் கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர் ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே. | [7] |
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே, மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்; பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர் பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே. | [8] |
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண் பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்- சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்- ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே. | [9] |
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்- நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய், ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே. | [10] |
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்- அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால், மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே. | [11] |