sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
9.011
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை (திருமுகத்தலை ) |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.011  
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
பண் - (திருத்தலம் திருமுகத்தலை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
புவனநா யகனே அகவுயிர்க் கமுதே பூரணா ஆரணம் பொழியும் பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும் பசுபதீ பன்னகா பரணா அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே. | [1] |
புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொரு ளுணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும் முகத்தலை யகத்தமர்ந் தடியேன் விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே. | [2] |
கன்னகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணின்நீர் சொரியேன் முன்னகா வொழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை யகத்தமர்ந் துறையும் பன்னகா பரணா பவளவாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்த தென்னகா ரணம்நீ ஏழைநா யடியேற் கெளிமையோ பெருமையா வதுவே. | [3] |
கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க் கிடையனா ருடையஎன் னெஞ்சிற் பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும் பரமனே பன்னகா பரணா மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை மூதூர் நீடினா யெனினும் உள்புகுந் தடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே. | [4] |
அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ டென்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக் கென்னையாள் ஆண்ட நாயகனே முக்கணா யகனே முழுதுல கிறைஞ்ச முகத்தலை யகத்தமர்ந் தடியேன் பக்கலா னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. | [5] |
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே முகத்தலை யகத்தமர்ந் தடியேன் வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே. | [6] |
விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும் கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங் கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை யகத்தமர்ந் தாயைப் பிரியுமா றுளதே பேய்களோம் செய்த பிழைபொறுத் தாண்டபே ரொளியே. | [7] |
என்னைஉன் பாத பங்கயம் பணிவித் தென்பெலாம் உருகநீ எளிவந் துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனியைஆ யினையே. | [8] |
அம்பரா அனலா அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவி உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயும்ஆ யினையே. | [9] |
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை யகத்தமர்ந் தினிய பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி யிணைமேல் ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே. | [10] |