sivasiva.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.029
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாரு மன்னும் முலை மங்கை கொல்லி (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=RWWoxMk9Bt8 |
5.084
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு திருக்குறுந்தொகை (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Nvcv2kY9x6c |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.029  
வாரு மன்னும் முலை மங்கை
பண் - கொல்லி (திருத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு வார்கொண்டமுலையம்மை உடனுறை அருள்மிகு தீயாடியப்பர் திருவடிகள் போற்றி )
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்; ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள் நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே! | [1] |
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப் பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே. | [2] |
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர் கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே | [3] |
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள் நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே! | [4] |
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக் கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ள திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே | [5] |
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன் ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக் காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள் நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே! | [6] |
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே. | [7] |
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர் மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான், கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள் தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே. | [8] |
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன், தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்- கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள் அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே. | [9] |
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள் வாதினால் உரை அவை மெய் அல; வைகலும், காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள் ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே. | [10] |
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்- அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல், கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள் பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.084  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆரணியசுந்தரர் திருவடிகள் போற்றி )
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம், காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே! | [1] |
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்! கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே, காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே! | [2] |
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே, கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி ஞான நாயகனைச் சென்று நண்ணுமே! | [3] |
அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும் கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே! | [4] |
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும், அற்றபோது அணையார், அவர் என்று என்றே, கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப் பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே! | [5] |
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும், துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்; கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே. | [6] |
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார், பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்! கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம் ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே! | [7] |
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர், சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்! காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை நீலகண்டனை நித்தல் நினைமினே! | [8] |
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்! அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே! | [9] |
எண் இலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன், கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர்தம் வினை நாசமே. | [10] |