சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

5.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  (கோயில் (சிதம்பரம்))  
5.002 திருநாவுக்கரசர் - தேவாரம் -பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  (கோயில் (சிதம்பரம்))  
5.003 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  (திருநெல்வாயில் அரத்துறை)  
5.004 திருநாவுக்கரசர் - தேவாரம் -வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  (திருவண்ணாமலை)  
5.005 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டி ஏறு உகந்து ஏறி,  (திருவண்ணாமலை)  
5.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  (திருவாரூர்)  
5.007 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  (திருவாரூர்)  
5.008 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாறு அலைத்த படுவெண் தலையினன்;  (திருஅன்னியூர் (பொன்னூர்))  
5.009 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் மால் கடல் பரவி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
5.010 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
5.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  (திருமீயச்சூர்)  
5.012 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  (திருவீழிமிழலை)  
5.013 திருநாவுக்கரசர் - தேவாரம் -என் பொனே! இமையோர் தொழு  (திருவீழிமிழலை)  
5.014 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  (திருவிடைமருதூர்)  
5.015 திருநாவுக்கரசர் - தேவாரம் -பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  (திருவிடைமருதூர்)  
5.016 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  (திருப்பேரெயில்)  
5.017 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  (திருவெண்ணியூர்)  
5.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  (திருக்கடம்பந்துறை (குளித்தலை))  
5.019 திருநாவுக்கரசர் - தேவாரம் -தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  (திருக்கடம்பூர்)  
5.020 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  (திருக்கடம்பூர்)  
5.021 திருநாவுக்கரசர் - தேவாரம் -என்னில் ஆரும் எனக்கு இனியார்  (திருஇன்னம்பர்)  
5.022 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  (திருகுடமூக்கு (கும்பகோணம்))  
5.023 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடுங் கண் வெண்தலை கொண்டு,  (திருநின்றியூர்)  
5.024 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒற்றி ஊரும் ஒளி மதி,  (திருவொற்றியூர்)  
5.025 திருநாவுக்கரசர் - தேவாரம் -முந்தி மூ எயில் எய்த  (திருப்பாசூர்)  
5.026 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  (திருவன்னியூர்)  
5.027 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வாய்தல் உளான், வந்து;  (திருவையாறு)  
5.028 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  (திருவையாறு)  
5.029 திருநாவுக்கரசர் - தேவாரம் -நிறைக்க வாலியள் அல்லள், இந்  (திருவாவடுதுறை)  
5.030 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  (திருப்பராய்துறை)  
5.031 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  (திருவானைக்கா)  
5.032 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி கொள் செல்வ விழாக்  (திருப்பூந்துருத்தி)  
5.033 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  (திருச்சோற்றுத்துறை)  
5.034 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  (திருநெய்த்தானம்)  
5.035 திருநாவுக்கரசர் - தேவாரம் -அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  (திருப்பழனம்)  
5.036 திருநாவுக்கரசர் - தேவாரம் -கான் அறாத கடி பொழில்  (திருச்செம்பொன்பள்ளி)  
5.037 திருநாவுக்கரசர் - தேவாரம் -மலைக் கொள் ஆனை மயக்கிய  (திருக்கடவூர் வீரட்டம்)  
5.038 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழை கொள் காதினர், கோவண  (திருக்கடவூர் மயானம்)  
5.039 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொள்ளும் காதன்மை பெய்து உறும்  (திருமயிலாடுதுறை)  
5.040 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  (திருக்கழிப்பாலை)  
5.041 திருநாவுக்கரசர் - தேவாரம் -உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  (திருப்பைஞ்ஞீலி)  
5.042 திருநாவுக்கரசர் - தேவாரம் -நன்று நாள்தொறும் நம் வினை  (திருவேட்களம்)  
5.043 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  (திருநல்லம்)  
5.044 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா மாத்து ஆகிய மால்  (திருவாமாத்தூர்)  
5.045 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாது இயன்று மனைக்கு இரு!  (சீர்காழி)  
5.046 திருநாவுக்கரசர் - தேவாரம் -துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  (திருப்புகலூர்)  
5.047 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்டு செய்த பழவினையின் பயன்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
5.048 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
5.049 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண் காட்டிப் படிஆய தன்  (திருவெண்காடு)  
5.050 திருநாவுக்கரசர் - தேவாரம் -எங்கே என்ன, இருந்த இடம்  (திருவாய்மூர்)  
5.051 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீல மா மணிகண்டத்தர்; நீள்  (திருப்பாலைத்துறை)  
5.052 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லர்; நல்லது ஓர் நாகம்  (திருநாகேச்சரம்)  
5.053 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோணல் மா மதி சூடி,  (திருவதிகை வீரட்டானம்)  
5.054 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  (திருவதிகை வீரட்டானம்)  
5.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -வீறு தான் உடை வெற்பன்  (திருநாரையூர்)  
5.056 திருநாவுக்கரசர் - தேவாரம் -மைக் கொள் கண் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))  
5.057 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  (திருக்கோளிலி (திருக்குவளை))  
5.058 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  (திருப்பழையாறை வடதளி)  
5.059 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் ஆற்றின் படை வேண்டி,  (திருமாற்பேறு)  
5.060 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏதும் ஒன்றும் அறிவு இலர்  (திருமாற்பேறு)  
5.061 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து ஊரும் புனல் மொய்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
5.062 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்))  
5.063 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  (திருத்தென்குரங்காடுதுறை)  
5.064 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  (திருக்கோழம்பம்)  
5.065 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  (திருப்பூவனூர்)  
5.066 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் ஆர் கடலின் விடம்  (திருவலஞ்சுழி)  
5.067 திருநாவுக்கரசர் - தேவாரம் -படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  (திருவாஞ்சியம்)  
5.068 திருநாவுக்கரசர் - தேவாரம் -உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  (திருநள்ளாறு)  
5.069 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  (திருக்கருவிலிக்கொட்டிட்டை)  
5.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  (திருக்கொண்டீச்சரம்)  
5.071 திருநாவுக்கரசர் - தேவாரம் -குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  (திருவிசயமங்கை)  
5.072 திருநாவுக்கரசர் - தேவாரம் -வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  (திருநீலக்குடி)  
5.073 திருநாவுக்கரசர் - தேவாரம் -தங்கு அலப்பிய தக்கன் பெரு  (திருமங்கலக்குடி)  
5.074 திருநாவுக்கரசர் - தேவாரம் -விரும்பி ஊறு விடேல், மட  (திருவெறும்பூர்)  
5.075 திருநாவுக்கரசர் - தேவாரம் -மரக் கொக்குஆம் என வாய்விட்டு  (திருக்குரக்குக்கா)  
5.076 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவின் நாதனும், செம்மலர் மேல்  (திருக்கானூர்)  
5.077 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூரியா வரும், புண்ணியம்; பொய்  (திருச்சேறை (உடையார்கோவில்))  
5.078 திருநாவுக்கரசர் - தேவாரம் -சங்கு உலாம் முன்கைத் தையல்  (திருக்கோடி (கோடிக்கரை))  
5.079 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள் எருக்கு அரவம் விரவும்  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
5.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானம் சேர் மதி சூடிய  (திருஅன்பில் ஆலந்துறை)  
5.081 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  (திருப்பாண்டிக்கொடுமுடி)  
5.082 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ட மா மலர் கொண்டு  (திருவான்மியூர்)  
5.083 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
5.084 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)  
5.085 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  (திருச்சிராப்பள்ளி)  
5.086 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  (திருவாட்போக்கி (ரத்னகிரி))  
5.087 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
5.088 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருகல் ஆம், தவம்; பேதைமை  (திருமருகல்)  
5.089 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
5.090 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் வீணையும், மாலை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
5.091 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏ இலானை, என் இச்சை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
5.092 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை)  
5.093 திருநாவுக்கரசர் - தேவாரம் -காசனை, கனலை, கதிர் மா  (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை)  
5.094 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  (தொழற்பாலதே திருக்குறுந்தொகை)  
5.095 திருநாவுக்கரசர் - தேவாரம் -புக்கு அணைந்து புரிந்து அலர்  (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை)  
5.096 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் உள்ளத் திரள் புன்சடையின்  (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை)  
5.097 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை)  
5.098 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு அலைத்தது ஓர் மேனி,  (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை)  
5.099 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாவமும் பழி பற்று அற  (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை)  
5.100 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)  

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  
Tune - பழந்தக்கராகம்   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

[1]
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும், திரிந்தும், காண வல்லரோ-
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து-
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை,
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

[1]
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை,
பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநெல்வாயில் அரத்துறை God: Goddess: )

கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[1]
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.004  
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)

வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[1]
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.005  
பட்டி ஏறு உகந்து ஏறி,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

[1]
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.006  
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,
செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,
அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே.

[1]
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.007  
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)

கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,
அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.

[1]
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்:
வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன்,
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.008  
பாறு அலைத்த படுவெண் தலையினன்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருஅன்னியூர் (பொன்னூர்) God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)

பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.

[1]
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்-
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.009  
ஓதம் மால் கடல் பரவி  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)

பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[1]
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.011  
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமீயச்சூர் God: முயற்சிநாதேசுவரர் Goddess: சுந்தரநாயகியம்மை)

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

[1]
கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.012  
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.

[1]
பாலையாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்,
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும், வீழிமிழலையே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.013  
என் பொனே! இமையோர் தொழு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)

என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;
செம்பொனே! திரு வீழிமிழலையுள்
அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!

[1]
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே! திரு வீழிமிழலையுள்
அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.014  
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)

பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.

[1]
கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,
பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும்,
தனி முடீ கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.015  
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம்,
இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.016  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பேரெயில் God: Goddess: )

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

[1]
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்;
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்;
மாணியாய் மண் அளந்தவன், நான்முகன்,
பேணியார் அவர் பேரெயிலாளரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.017  
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவெண்ணியூர் God: வெண்ணிநாயகர் Goddess: அழகியநாயகியம்மை)

முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[1]
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்;
காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.018  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கடம்பந்துறை (குளித்தலை) God: Goddess: )

முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.

[1]
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட!
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்;
காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.019  
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கடம்பூர் God: அமுதகடேசுவரர் Goddess: சோதிமின்னம்மை)

தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன்,
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.020  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கடம்பூர் God: அமுதகடேசுவரர் Goddess: சோதிமின்னம்மை)

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன்
உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற,
இரக்கம் இன்றி இறை விரலால்-தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.021  
என்னில் ஆரும் எனக்கு இனியார்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருஇன்னம்பர் God: எழுத்தறிந்தவீசுவரர் Goddess: கொந்தார்பூங்குழலம்மை)

என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்;
என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.

[1]
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடிபத்து உடையான் தனைக்
கனிய ஊன்றிய காரணம் என்கொலோ,
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.022  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருகுடமூக்கு (கும்பகோணம்) God: கும்பேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு
ஆவணத்து உடையான், அடியார்களை;-
தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர்
கோவணத்து உடையான், குடமூக்கிலே.

[1]
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின்
கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.023  
கொடுங் கண் வெண்தலை கொண்டு,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநின்றியூர் God: மகாலட்சுமியீசுவரர் Goddess: உலகநாயகியம்மை)

கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

[1]
எளியனா மொழியா இலங்கைக்கு இறை,
களியினால் கயிலாயம் எடுத்தவன்,
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால்-தொழுவார் வினை அல்குமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.024  
ஒற்றி ஊரும் ஒளி மதி,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)

ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

[1]
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம்,
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்,
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.025  
முந்தி மூ எயில் எய்த  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பாசூர் God: பாசூர்நாதர் Goddess: பசுபதிநாயகியம்மை)

முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்-
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.

[1]
மாலினோடு மறையவன் தானும் ஆய்,
மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்;
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப்
பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.026  
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவன்னியூர் God: Goddess: )

காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.027  
சிந்தை வாய்தல் உளான், வந்து;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

[1]
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று,
அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே,
அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.028  
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[1]
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.029  
நிறைக்க வாலியள் அல்லள், இந்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாவடுதுறை God: Goddess: )

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

[1]
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;
அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை
நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.030  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பராய்துறை God: திருப்பராய்த்துறைநாதர் Goddess: பசும்பொன்மயிலம்மை)

கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.

[1]
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.031  
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்;
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.

[1]
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட, கெழுவினான்,
பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர்
ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.032  
கொடி கொள் செல்வ விழாக்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பூந்துருத்தி God: புஷ்பவனநாதர் Goddess: அழகாலமர்ந்தநாயகி)

கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக்
கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார்,
பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர்
அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[1]
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப்
பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம்
பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப்
படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.033  
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  
Tune - நாட்டைக்குறிஞ்சி   (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகை)

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[1]
மிண்டரோடு விரவியும் வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ
தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.034  
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)

கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன்,
நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.

[1]
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.035  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)

அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

[1]
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,
பங்கன், என்றும் பழனன், உமையொடும்
தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.036  
கான் அறாத கடி பொழில்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருச்செம்பொன்பள்ளி God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான்,
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி-
தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!

[1]
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால்
எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்;
அரிய வானம் அவர் அருள்செய்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.037  
மலைக் கொள் ஆனை மயக்கிய  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கடவூர் வீரட்டம் God: பிரமபுரீசுவரர் Goddess: மலர்க்குழல்மின்னம்மை)

மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!
கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,
கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.

[1]
நீண்ட மாலொடு நான்முகன்தானும் ஆய்,
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்;
காண்டல் ஆனைகண்டீர்-கடவூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.038  
குழை கொள் காதினர், கோவண  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கடவூர் மயானம் God: பிரமபுரீசுவரர் Goddess: மலர்க்குழல்மின்னம்மை)

குழை கொள் காதினர், கோவண ஆடையர்,
உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்;
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.039  
கொள்ளும் காதன்மை பெய்து உறும்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமயிலாடுதுறை God: மாயூரநாதர் Goddess: அஞ்சநாயகியம்மை)

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

[1]
நீள் நிலா அரவச் சடை நேசனைப்
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்;
வாள்நிலா மயிலாடுதுறைதனைக்
காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.040  
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.041  
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பைஞ்ஞீலி God: நீலகண்டேசுவரர் Goddess: விசாலாட்சியம்மை)

உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.

[1]
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே
அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம்,
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.042  
நன்று நாள்தொறும் நம் வினை  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவேட்களம் God: பாசுபதேசுவரர் Goddess: நல்லநாயகியம்மை)

நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

[1]
சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற
வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.043  
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநல்லம் God: உமாமகேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!
நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்
சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.

[1]
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி,
நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.044  
மா மாத்து ஆகிய மால்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாமாத்தூர் God: அழகியநாதர் Goddess: அழகியநாயகியம்மை)

மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.

[1]
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.045  
மாது இயன்று மனைக்கு இரு!  
Tune - திருக்குறுந்தொகை   (Location: சீர்காழி God: தோணியப்பர் Goddess: திருநிலைநாயகியம்மை)

மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்,
நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்;
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத்
தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.

[1]
இட்டம் ஆயின செய்வாள், என் பெண் கொடி-
கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத்
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.046  
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்புகலூர் God: வர்த்தமானீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

[1]
மத்தனாய், மதியாது, மலைதனை
எத்தினான் திரள் தோள் முடிபத்து இற
ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.047  
பண்டு செய்த பழவினையின் பயன்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே!
வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!

[1]
இடுகுநுண் இடை, ஏந்து இளமென்முலை,
வடிவின், மாதர் திறம் மனம் வையன்மின்!
பொடி கொள் மேனியன், பூம்பொழில் கச்சியுள்
அடிகள், எம்மை அருந்துயர் தீர்ப்பரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.048  
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  
Tune - திருக்குறுந்தொகை   (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)

பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற
தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா!
ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?

[1]
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை
நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து
இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம்,
தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.049  
பண் காட்டிப் படிஆய தன்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)

பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

[1]
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர்,
சேலை ஆடிய கண் உமை பங்கனார்,
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.050  
எங்கே என்ன, இருந்த இடம்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாய்மூர் God: வாய்மூரீசுவரர் Goddess: பாலினுநன்மொழியம்மை)

எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?

[1]
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.051  
நீல மா மணிகண்டத்தர்; நீள்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பாலைத்துறை God: பாலைவனநாதர் Goddess: தவளவெண்ணகையம்மை)

நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கோல மா மதி கங்கையும் கூட்டினார்;
சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப்
பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.

[1]
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்;
அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்;
செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்;
பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.052  
நல்லர்; நல்லது ஓர் நாகம்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநாகேச்சரம் God: செண்பகாரணியேசுவரர் Goddess: குன்றமுலைநாயகியம்மை)

நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி
செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.

[1]
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே
சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்;
ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.053  
கோணல் மா மதி சூடி,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

கோணல் மா மதி சூடி, ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[1]
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்;
நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால்,
பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.054  
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவதிகை வீரட்டானம் God: வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)

எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி
மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்-
கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ-
ரட்டனார் அடி சேருமவருக்கே.

[1]
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு,
அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து,
அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ-
ரட்டனார் அடி சேருமவர்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.055  
வீறு தான் உடை வெற்பன்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநாரையூர் God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)

வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்-
கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும்,
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும், அம்ம அழகிதே!

[1]
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும்
நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும், அம்ம அழகிதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.056  
மைக் கொள் கண் உமை  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கோளிலி (திருக்குவளை) God: கோளிலியப்பர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)

மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத்
தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன்,
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி
நக்கனை, தொழ நம்வினை நாசமே.

[1]
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை
அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள்
கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ,
விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.057  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கோளிலி (திருக்குவளை) God: கோளிலியப்பர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)

முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே, அடியேனை மறவலே!

[1]
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி
அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.058  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பழையாறை வடதளி God: சோமேசுவரர் Goddess: சோமகலாநாயகியம்மை)

தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!

[1]
செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல்,
எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய
அருத்தனை; பழையாறை வடதளித்
திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.059  
பொரும் ஆற்றின் படை வேண்டி,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)

பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும்
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு
திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.

[1]
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத்
தருக்கினால் எடுத்தானைத் தகரவே
வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.060  
ஏதும் ஒன்றும் அறிவு இலர்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)

ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.061  
முத்து ஊரும் புனல் மொய்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருஅரிசிற்கரைப்புத்தூர் God: படிக்காசளித்தவீசுவரர் Goddess: அழகம்மை)

முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம்
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

[1]
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல்,
பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல்
பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.062  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) God: சொர்ணபுரீசுவரர் Goddess: சொர்ணபுரிநாயகியம்மை)

ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர்
கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

[1]
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை,
திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.063  
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருத்தென்குரங்காடுதுறை God: குலைவணங்குநாதர் Goddess: அழகுசடைமுடியம்மை)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.

[1]
நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ,
பற்றும் தீவினை ஆயின பாறுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.064  
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கோழம்பம் God: கோகுலேசுவரர் Goddess: சவுந்தரியம்மை)

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;
கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்-
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

[1]
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய,
அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள் உடையார்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.065  
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பூவனூர் God: புஷ்பவனநாதர் Goddess: கற்பகவல்லியம்மை)

பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

[1]
நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன்,
வாரணன், குமரன், வணங்கும் கழல்
பூரணன்திருப் பூவனூர் மேவிய
காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.066  
ஓதம் ஆர் கடலின் விடம்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவலஞ்சுழி God: காப்பகத்தீசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை,
மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை,
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[1]
இலங்கை வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்,
மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி
வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாஞ்சியம் God: வாஞ்சியநாதர் Goddess: வாழவந்தநாயகியம்மை)

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.068  
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநள்ளாறு God: தெர்ப்பாரணியர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)

உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
தெள் ஆறாச் சிவசோதித்திரளினை,
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறா! என, நம் வினை நாசமே.

[1]
இலங்கை மன்னன் இருபது தோள் இற
மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்,
நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும்
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கருவிலிக்கொட்டிட்டை God: சற்குணநாதர் Goddess: சர்வாங்கநாயகியம்மை)

மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர்,
கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!

[1]
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்,
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி,
கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.070  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கொண்டீச்சரம் God: பசுபதீசுவரர் Goddess: சாந்தநாயகியம்மை)

கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

[1]
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.071  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவிசயமங்கை God: விசயநாதேசுவரர் Goddess: மங்கைநாயகியம்மை)

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!

[1]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும்,
நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநீலக்குடி God: நீலகண்டேசுவரர் Goddess: நீலநிறவுமையம்மை)

வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செத்தபோது, செறியார் பிரிவதே;
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

[1]
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால்
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும்
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமங்கலக்குடி God: புராணவரதேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)

தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே.

[1]
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன்,
தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து,
அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.074  
விரும்பி ஊறு விடேல், மட  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவெறும்பூர் God: எறும்பீசுவரர் Goddess: நறுங்குழல்நாயகியம்மை)

விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[1]
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட,
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்குரக்குக்கா God: கொந்தளக்கருணைநாதர் Goddess: கொந்தளநாயகியம்மை)

மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர்,
சரக்குக் காவி, திரிந்து அயராது, கால்
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக்
குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.

[1]
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி,
உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்-
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா;
வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.076  
திருவின் நாதனும், செம்மலர் மேல்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கானூர் God: செம்மேனிநாயகர் Goddess: சிவயோகநாயகியம்மை)

திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை
உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருச்சேறை (உடையார்கோவில்) God: சென்னெறியப்பர் Goddess: ஞானவல்லியம்மை)

பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

[1]
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருக்கோடி (கோடிக்கரை) God: கோடீசுவரர் Goddess: வடிவாம்பிகையம்மை)

சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.079  
வெள் எருக்கு அரவம் விரவும்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) God: வைத்தியநாதர் Goddess: தையல்நாயகியம்மை)

வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்
புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்,
நள் இருப்பர், நரகக்குழியிலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.080  
வானம் சேர் மதி சூடிய  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருஅன்பில் ஆலந்துறை God: சத்திவாகீசர் Goddess: சவுந்தரநாயகியம்மை)

வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை;
ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக்
கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!

[1]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று
மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன்,
அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.081  
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருப்பாண்டிக்கொடுமுடி God: கொடுமுடிநாதேசுவரர் Goddess: பண்மொழியம்மை)

சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,
அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்
பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி
நட்டனை, தொழ, நம் வினை நாசமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.082  
விண்ட மா மலர் கொண்டு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவான்மியூர் God: மருந்தீசுவரர் Goddess: சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.

[1]
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்
சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்;
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்,
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.083  
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)

பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்;
காணத் தான் இனியான் கடல் நாகைக்கா-
ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.

[1]
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய, பாதம் அணைதர,
தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.084  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  
Tune - திருக்குறுந்தொகை   (Location: மேலைத்திருக்காட்டுப்பள்ளி God: ஆரணியசுந்தரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)

மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

[1]
எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன்,
கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருச்சிராப்பள்ளி God: தாயுமானேசுவரர் Goddess: மட்டுவார்குழலம்மை)

மட்டு வார்குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்;
கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும்
சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.086  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருவாட்போக்கி (ரத்னகிரி) God: இரத்தினகிரீசுவரர் Goddess: சுரும்பார்குழலம்மை)

காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பாலகர், விருத்தர், பழையார் எனார்;
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

[1]
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே,
அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.087  
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) God: மணவாளநாயகர் Goddess: யாழ்மொழியம்மை)

பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!

[1]
கடுத்த மேனி அரக்கன், கயிலையை
எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப்
படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக்
கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.088  
பெருகல் ஆம், தவம்; பேதைமை  
Tune - திருக்குறுந்தொகை   (Location: திருமருகல் God: மாணிக்கவண்ணர் Goddess: வண்டுவார்குழலி)

பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்;
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்;
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்-
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

[1]
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று,
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும்
ஆதியான், மருகல் பெருமான், திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.089  
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -தனித் திருக்குறுந்தொகை God: Goddess: )

ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

[1]
பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்;
பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை;
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.090  
மாசு இல் வீணையும், மாலை  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -தனித் திருக்குறுந்தொகை God: Goddess: )

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.091  
ஏ இலானை, என் இச்சை  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -தனித் திருக்குறுந்தொகை God: Goddess: )

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -காலபாசத் திருக்குறுந்தொகை God: Goddess: )

கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

[1]
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால்
பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.093  
காசனை, கனலை, கதிர் மா  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை God: Goddess: )

காசனை, கனலை, கதிர் மா மணித்-
தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்;
மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே?

[1]
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,
உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை,
பருகு பாலனை, பால்மதி சூடியை,
மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.094  
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: தொழற்பாலதே திருக்குறுந்தொகை God: Goddess: )

அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு-
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்-
துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

[1]
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள்
கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு-
பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.095  
புக்கு அணைந்து புரிந்து அலர்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை God: Goddess: )

புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்;
சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை
மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[1]
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்;
அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக்
கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.096  
பொன் உள்ளத் திரள் புன்சடையின்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை God: Goddess: )

பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!

[1]
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம்,
எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது,
எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார்,
எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.097  
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை God: Goddess: )

சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி
வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.

[1]
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.098  
நீறு அலைத்தது ஓர் மேனி,  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -உள்ளத் திருக்குறுந்தொகை God: Goddess: )

நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[1]
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை
அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.099  
பாவமும் பழி பற்று அற  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை God: Goddess: )

பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

[1]
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக்
குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி
பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 - Thirumurai   Pathigam 5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  
Tune - திருக்குறுந்தொகை   (Location: பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை God: Goddess: )

வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.

[1]
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.

[10]

This page was last modified on Sun, 10 Mar 2024 22:40:27 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai number