ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி வெள்ளியான் உறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில் தெள்ளியார்; அவர் தேவரே.
| [ 1]
|
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர் வேடம் கொண்டவன் வேற்காடு பாடியும் பணிந்தார் இவ் உலகினில் சேடர் ஆகிய செல்வரே.
| [ 2]
|
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி, வேதவித்தகன், வேற்காடு, போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதம் எய்துதல் இல்லையே.
| [ 3]
|
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன், வீழ்சடையினன், வேற்காடு, தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட, பாழ்படும், அவர் பாவமே.
| [ 4]
|
காட்டினானும், அயர்த்திடக் காலனை வீட்டினான், உறை வேற்காடு பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார், வினை ஒல்லையே.
| [ 5]
|
Go to top |
தோலினால் உடை மேவ வல்லான், சுடர் வேலினான், உறை வேற்காடு நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர், மாலினார், வினை மாயுமே.
| [ 6]
|
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் வில்லினான் உறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர், தீர்க்கமே.
| [ 7]
|
மூரல் வெண் மதி சூடும் முடி உடை வீரன் மேவிய வேற்காடு வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர் சேர்வர், செய் கழல்; திண்ணமே.
| [ 8]
|
பரக்கினார் படு வெண் தலையில் பலி விரக்கினான் உறை வேற் காட்டூர், அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை நெருக்கினானை நினைமினே!
| [ 9]
|
மாறு இலா மலரானொடு மால் அவன் வேறு அலான் உறை வேற்காடு ஈறு இலா மொழியே மொழியா எழில் கூறினார்க்கு இல்லை, குற்றமே.
| [ 10]
|
Go to top |
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு கண்டு, நம்பன் கழல் பேணி, சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு பாட, குணம் ஆமே.
| [ 11]
|