தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
| [ 1]
|
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும் எந்தை யிவனல்லம் யாமே உலகினிற் பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தமி லானும் அருள்புரிந் தானே.
| [ 2]
|
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள் அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும் அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந் தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
| [ 3]
|
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் அப்பரி சேயவ ராகிய காரணம் அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட் டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.
| [ 4]
|
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக் குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரமிது சென்று கதுவ உவந்த பெருவழி யோடிவந் தானே.
| [ 5]
|
Go to top |
அரிபிர மன்தக்கன் அற்க னுடனே வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன் சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம் அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
| [ 6]
|
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர் அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச் சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங் குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
| [ 7]
|
நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
| [ 8]
|
நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே. 5,
| [ 9]
|