உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
| [ 1]
|
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.
| [ 2]
|
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே.
| [ 3]
|
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள் மறியார் வளைக்க வருபுனற் கங்கைப் பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே.
| [ 4]
|
கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல் உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர் திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென் றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
| [ 5]
|
Go to top |
கலந்தது நீர துடம்பிற் கறுக்கும் கலந்தது நீர துடம்பிற் சிவக்கும் கலந்தது நீர துடம்பில் வெளுக்கும் கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.19,
| [ 6]
|