உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
| [ 1]
|
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
| [ 2]
|
சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித் துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க் கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.
| [ 3]
|
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
| [ 4]
|
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட் டூன்றி யிருக்க உடம்பழி யாதே.
| [ 5]
|
Go to top |
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.
| [ 6]
|
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம் தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.
| [ 7]
|
திறத்திறம் விந்து திகழும் அகாரம் உறப்பெற வேநினைந் தோதும் சகாரம் மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.
| [ 8]
|
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.
| [ 9]
|
மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே.
| [ 10]
|
Go to top |
நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே.
| [ 11]
|
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே.
| [ 12]
|
பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின் வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார் கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே.
| [ 13]
|
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே.
| [ 14]
|
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.
| [ 15]
|
Go to top |
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப்பல் கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 14,
| [ 16]
|