எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல் அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல் பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
| [ 1]
|
அதுவிது ஆதிப் பரமென் றகல்வர் இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடும் அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே
| [ 2]
|
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
| [ 3]
|
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக் கண்ணவன் என்று கருது மவர்கட்குப் பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.
| [ 4]
|
வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும் பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின் மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை நேசித் திருந்த நினைவறி யாரே. 13,
| [ 5]
|
Go to top |