மாயை இரண்டு மறைக்க மறைவுறும் காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.
| [ 1]
|
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலா அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.
| [ 2]
|
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையு மாகி விரிவு குவிவற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே.
| [ 3]
|
ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.
| [ 4]
|
கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல் குருவின் உருவம் குறித்த அப்போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.
| [ 5]
|
Go to top |
தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும் மான்ற அறிவும் மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.
| [ 6]
|
சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர் பந்தம் அறுத்த பரம்குரு பற்று.
| [ 7]
|
மனம்புகு தான்உல கேழும் மகிழ நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே
| [ 8]
|
தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும் தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில் தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.
| [ 9]
|
மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும் கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு) அருவினை சோரும் அழிவார் அகத்தே.
| [ 10]
|
Go to top |
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு நிலைப்பட நாடி நினைப்பற உள்கின் தலைப்பட லாகும் தருமமுந் தானே.
| [ 11]
|
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.
| [ 12]
|
தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.
| [ 13]
|
நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.
| [ 14]
|
வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச் சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம் இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.
| [ 15]
|
Go to top |
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய் விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.
| [ 16]
|
பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால் பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு) உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.
| [ 17]
|
அம்பர நாதன் அகலிட நீள்பொழில் தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.
| [ 18]
|
கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 3,
| [ 19]
|