அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல் கண்டங் கரியான் கருணைத் திருவுருக் கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே. | [ 1]
|
பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம் பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன் பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம் பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
| [ 2]
|
அங்குசம் என்ன எழுமார்க்கப் போதத்தில் தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.
| [ 3]
|
ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக் காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
| [ 4]
|
சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும் சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.
| [ 5]
|
Go to top |
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும் ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே. 13,
| [ 6]
|