சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

11.027   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை

சீர்காழி -
திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ
றிமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த

வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும்
முதிரா இளமுறை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை

இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்

பொலிவினொடு மலர மறையோர்
கழுமலம் நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்
கொன்றா வந்த குன்றா வெள்ளத்

துலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோவென் றழைப்பமுன் நின்று

ஞான போனகம் அருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யார் என
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுயை செவியன் என்றும்

பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.


[ 1]


அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் இருள்புகுதுங்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்க்
கண்டத்தார் தாமார் அதற்கு.


[ 2]


ஆரணம் நான்கிற்கும் அப்பா
லவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.


[ 3]


கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல்
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்
தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமயக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்

கெழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.


[ 4]


மானும் மழுவுந் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையுந் தரித்திருக்கும் வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.


[ 5]


Go to top
ஒளிவந்த வாபொய் மனத்திருள்
நீங்கவென் உள்ளம்வெள்ளம்
தெளிவந்த வாவந்து தித்தித்த
வாசிந்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த
வாகடை சாரமையத்
தெளிவந்த வாநங் கழுமல
வாணர்தம் இன்னருளே
.


[ 6]


அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான் அவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யான் அவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.


[ 7]


கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் உடலாம்
முழுமலத்தை ஒர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.


[ 8]


தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேஅலர்கொண்
டெழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுமா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக் கண்டு வந்ததென்
றாலொர் வசையில்லையே.


[ 9]


வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுங்கண்நாட் டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை

யாயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி

இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி

ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த தெந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை

ஒவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றனவே.


[ 10]


Go to top
எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.


[ 11]


போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேஇணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.


[ 12]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: சீர்காழி
1.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.126   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.129   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்   (சீர்காழி )
2.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )
3.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி   (சீர்காழி )
3.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
5.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
7.058   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி   (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
8.137   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை   (சீர்காழி )
11.027   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை   திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -   (சீர்காழி )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song