ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண ஆடையர், குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார், மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.
| [ 1]
|
அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப் புக்கவர் துயர் கெடுக! என பூசு வெண்பொடி மேவிய மிக்கவர் வழிபாடு செய் விளநகர், அவர் மேயதே.
| [ 2]
|
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த் தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர், மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது விளநகர் அதே.
| [ 3]
|
கால் விளங்கு எரி கழலினார், கை விளங்கிய வேலினார், நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்) இலார், மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார், மேல் விளங்கு வெண்பிறையினார்; மேயது விளநகர் அதே.
| [ 4]
|
மன்னினார், மறை, பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித் துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என; சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன் சேர்த்தினார்; மின்னு பொன் புரிநூலினார்; மேயது விள நகர் அதே.
| [ 5]
|
Go to top |
தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல் உள தெய்வமும், யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்; மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர் என்னவும், மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே.
| [ 6]
|
சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார், கல் தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார், மல் தரும் திரள் தோளினார், மாசு இல் வெண்பொடிப் பூசினார், வில் தரும் மணிமிடறினார், மேயது விள நகர் அதே.
| [ 7]
|
படர் தரும் சடை முடியினார், பைங்கழல் அடி பரவுவார் அடர் தரும் பிணி கெடுக என அருளுவார், அரவு அரையினார், விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார், மிடல் தரும் படைமழுவினார், மேயது விளநகர் அதே.
| [ 8]
|
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார், பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார், மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார், மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே.
| [ 9]
|
உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற மா மணிவண்ணனும், உள்ளதன் தனைக் காண்பன், மேல் என்ற மா மலர் அண்ணலும், உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும் சடைமுடியின்மேல் உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.
| [ 10]
|
Go to top |
மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன், சீர் இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப் போய், துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே
| [ 11]
|