எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?
| [ 1]
|
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி, என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?
| [ 2]
|
தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்; அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்; உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்; வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?
| [ 3]
|
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்; ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்; வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம் சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?
| [ 4]
|
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத் தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க் கள்ளியார் அவர் போல, கரந்ததே!
| [ 5]
|
Go to top |
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில், ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான் மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்- போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?
| [ 6]
|
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்- தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா, ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?
| [ 7]
|
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்; மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப் பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!
| [ 8]
|
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும், நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா, புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?
| [ 9]
|
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை; வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.
| [ 10]
|
Go to top |