sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   5 th/nd Thirumurai (திருக்குறுந்தொகை   Location: திருவாய்மூர் God: வாய்மூரீசுவரர் Goddess: பாலினுநன்மொழியம்மை) திருவாய்மூர் ; அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=gP5OpbzqOs4  
எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?


[ 1]


மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?


[ 2]


தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்;
அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்;
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்;
வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?


[ 3]


கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?


[ 4]


ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க்
கள்ளியார் அவர் போல, கரந்ததே!


[ 5]


Go to top
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?


[ 6]


பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?


[ 7]


திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்;
மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!


[ 8]


தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா,
புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?


[ 9]


தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாய்மூர்
2.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் என
Tune - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   எங்கே என்ன, இருந்த இடம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
6.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட அடியார், பரவக் கண்டேன்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php