ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர் கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.
| [ 1]
|
யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை, நாவின் நல் உரை ஆகிய நாதனை, தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.
| [ 2]
|
அன்பனை, அடியார் இடர் நீக்கியை, செம்பொனை, திகழும் திருக்கச்சி ஏ- கம்பனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர் நம்பனை, கண்டு நான் உய்யப்பெற்றெனே.
| [ 3]
|
மா தனத்தை, மா தேவனை, மாறு இலாக் கோதனத்தில் ஐந்து ஆடியை, வெண்குழைக் காதனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர் நாதனை, கண்டு நான் உய்யப் பெற்றெனே.
| [ 4]
|
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து, என்னை ஆட்- கொண்டு, நல்-திறம் காட்டிய கூத்தனை; கண்டனை; கடுவாய்க்கரைத்தென்புத்தூர் அண்டனை; கண்டு அருவினை அற்றெனே.
| [ 5]
|
Go to top |
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட மைந்தனை(ம்), மணவாளனை, மா மலர்க் கந்த நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எந்தை ஈசனை, கண்டு இனிது ஆயிற்றே.
| [ 6]
|
உம்பரானை, உருத்திர மூர்த்தியை, அம்பரானை, அமலனை, ஆதியை, கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே.
| [ 7]
|
மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள் நேசம் ஆகிய நித்த மணாளனை, பூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் ஈசனே! என, இன்பம் அது ஆயிற்றே.
| [ 8]
|
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே, கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்- படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே.
| [ 9]
|
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை, திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.
| [ 10]
|
Go to top |