சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
222   சுவாமிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 108 - வாரியார் # 211 )  

நாசர்தங் கடை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
Easy Version:
நாசர்தங் கடையதனில்
விரவிநான் மெத்த நொந்து
தடுமாறி ஞானமுங் கெட
அடைய வழுவி
ஆழத்து அழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழின்
ஓர் சொற் பகர்ந்து சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபாதத்தை
நின்று பணிவேனோ
வாசகம் புகல
ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தருதிருவை
ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும்
கேசவன் பரவுகுரு மலையில்
யோகத்தமர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

நாசர்தங் கடையதனில் ... கேடு செய்யும் கீழ்மக்களின்
இருப்பிடங்களுக்குச் சென்று
விரவிநான் மெத்த நொந்து ... அவர்களுடன் கலந்து அதனால்
மிகவும் நொந்து போய்,
தடுமாறி ஞானமுங் கெட ... தடுமாற்றம் அடைந்து சுய அறிவும்
கெட்டுப்போய்,
அடைய வழுவி ... முழுவதுமாக தவறான வழியில் விழுந்து,
ஆழத்து அழுந்தி மெலியாதே ... ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி
நான் மெலிவுறாமல்,
மாசகந் தொழுமுனது புகழின் ... இந்தச் சிறந்த உலகமே போற்றும்
உனது புகழின்
ஓர் சொற் பகர்ந்து சுகமேவி ... ஒரு சொல்லளவு பகுதியாவது
சொல்லி அதனால் சுகமடைந்து,
மாமணங் கமழுமிரு கமலபாதத்தை ... நறுமணம் வீசும் உன்
இரண்டு தாமரைப் பாதங்களை
நின்று பணிவேனோ ... மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க
மாட்டேனோ?
வாசகம் புகல ... உபதேச மொழியை நீ கூற,
ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா ... ஒப்பற்ற சிவபிரான்
மெச்சிப் புகழ்ந்த குருநாதனே,
வாசவன் தருதிருவை ... இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின்
அம்சமாகும்
ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா ... ஒப்பில்லா
தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே,
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் ... மூங்கில்,
கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம்
சுற்றிலும் சூழ்ந்துள்ள,
கேசவன் பரவுகுரு மலையில் ... திருமாலே போற்றிப் புகழும்
சுவாமி மலையில்
யோகத்தமர்ந்த பெருமாளே. ... உபதேச குருவாக
யோகநிலையில் அமர்ந்த பெருமாளே.

Similar songs:

222 - நாசர்தங் கடை (சுவாமிமலை)

தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

Songs from this thalam சுவாமிமலை

201 - அவாமருவு

202 - ஆனனம் உகந்து

203 - ஆனாத பிருதி

204 - இராவினிருள் போலும்

205 - இருவினை புனைந்து

206 - எந்தத் திகையினும்

207 - ஒருவரையும் ஒருவர்

208 - கடாவினிடை

209 - கடிமா மலர்க்குள்

210 - கதிரவனெ ழுந்து

211 - கறை படும் உடம்பு

212 - காமியத் தழுந்தி

213 - குமரகுருபர முருக குகனே

214 - குமர குருபர முருக சரவண

215 - கோமள வெற்பினை

216 - சரண கமலாலயத்தில்

217 - சுத்திய நரப்புடன்

218 - செகமாயை உற்று

219 - சேலும் அயிலும்

220 - தருவர் இவர்

221 - தெருவினில் நடவா

222 - நாசர்தங் கடை

223 - நாவேறு பா மணத்த

224 - நிலவினிலே

225 - நிறைமதி முகமெனும்

226 - பரவரிதாகி

227 - பலகாதல் பெற்றிட

228 - பாதி மதிநதி

229 - மகர கேதனத்தன்

230 - மருவே செறித்த

231 - முறுகு காள

232 - வாதமொடு சூலை

233 - வாரம் உற்ற

234 - வார்குழலை

235 - வார்குழல் விரித்து

236 - விடமும் வடிவேலும்

237 - விரித்த பைங்குழல்

238 - விழியால் மருட்டி

1336 - வறுமைப் பாழ்பிணி

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song