இடர்களையும் பதிகம்; அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு.
திருச்சி அருகில் துவாக்குடியிலிருந்து திருநெடுங்களத்தை அடைந்து வழிபட்டு இடும்பை தீர்த்தருள்வாய் என வேண்டி மறையுடையாய் என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள் திருமுறை 1.052
வழிப் பயணம் தடை இல்லாமல் நிறைவு பெற - சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருமுறை 3.006
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட
சம்பந்தர் மதுரை வந்தடைந்ததை அறிந்த சமணர்கள்; சம்பந்தரும் அடியார்களும் தங்கியிருந்த திருமடத்தை மந்திரத்தால் தீ மூட்டி எரிக்க முயன்றனர். அப்படி நிகழாததால்; திருஞான சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் இரவு நேரத்தில் தழல்கொண்டு புகுந்து தீமூட்டினர். அடியவர்கள் விரைந்து தீயை அணைத்தனர். அமணர்களே இப்பாதகத்தைச் செய்தவர்கள் என்று தெளிந்து; அதனைச் சம்பந்தரிடம் சொன்னார்கள். பாண்டியநாட்டில் ஆட்சி முறை தவறியது என்று சம்பந்தர் எண்ணினார். இதன் பொறுப்பு அரசனையே சேரும் என்னும் விதிமுறையால்; சைவர்கள் தங்கியிருந்த மடத்தில் இட்ட நெருப்பானது; பையவே சென்று பாண்டியனுக்கு ஆகுக என்று இத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்.
திருமுறை 3.051
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.
திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்கதிருமுறை 3.073