சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், பண் - நாட்டைக்குறிஞ்சி (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=56rtMguGQ7s |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.033  
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
பண் - நாட்டைக்குறிஞ்சி (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார், தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே! | [1] |
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை; அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை; தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே! | [2] |
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை கட்டி நின்ற கழிந்து அவை போய் அற, தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே! | [3] |
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான் என்றும், நின்மலனே என்றும், சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே! | [4] |
ஆட்டினாய், அடியேன் வினை ஆயின ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண் தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே! | [5] |
பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப் பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்! தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத் தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே! | [6] |
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்; ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும், தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே! | [7] |
பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்? புற்றில் ஆடு அரவே அது பூணில் என்? சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே! | [8] |
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்- பள்ளியான், அறியாத பரிசு எலாம் சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே! | [9] |
மிண்டரோடு விரவியும் வீறு இலாக் குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே! | [10] |
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான், சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே! | [11] |