சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் அமர் திங்களும் நீரும்
பண் - காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q-PqFOi6AJw
5.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=apt_My0HYZY
5.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1rmMXPsqTsg

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.068   வான் அமர் திங்களும் நீரும்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

[1]
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

[2]
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.

[3]
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.

[4]
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[5]
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

[6]
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்

[7]
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.

[8]
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.

[9]
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.

[10]
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.019   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும்
சொல வலான்; சுழலும் தடுமாற்றமும்
அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக்
கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

[2]
பொய் தொழாது, புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா,
வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர்
கைதொழா எழுமின், கரக்கோயிலே!

[3]
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே!
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே;
எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்-
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!

[4]
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன்,
புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான், கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.

[5]
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்-
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[6]
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை
மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[7]
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.

[8]
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்
தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே.

[9]
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன்,
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[10]
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,
திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.020   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர்
கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்;
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும்
மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

[2]
இல்லக் கோலமும், இந்த இளமையும்,
அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே!
ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே!

[3]
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவு இடம்-
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[4]
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்-
பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும்,
தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[5]
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்-
கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை,
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[6]
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி
வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது-
கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக்
களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[7]
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்-
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்,
கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.

[8]
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்-
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்,
கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[9]
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன்
உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற,
இரக்கம் இன்றி இறை விரலால்-தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list